News May 7, 2025

சித்தி மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

image

புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News January 1, 2026

புதுகை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், ht<>tps://cms.rbi.org.in <<>>என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News January 1, 2026

புதுகை: வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

image

சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக்(40), கேசவ்(33), நித்தின்(33) ஆகியோர் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி 2 டூவீலர்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுகை – கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சையிலிருந்து மதுரை நோக்கி சென்ற வேன் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவ் புதுகை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

News January 1, 2026

புதுகை: வடமாநில வாலிபருக்கு கத்திக்குத்து!

image

நமணசமுத்திரத்தில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் தீரஜ்குமார் (31). இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று பணியில் இருந்த போது ரெயில் வந்ததால் ரெயில்வே கேட்டை மூடினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கேட்டை திறக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் வைத்திருந்த கத்தியால் தீரஜ்குமாரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!