News April 11, 2025

சித்திரை திருவிழா – வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

image

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

Similar News

News December 3, 2025

மதுரை: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

image

மதுரை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 3, 2025

மதுரை: டீக்கடையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா எனுமிடத்தில் டீக்கடை ஒன்று உள்ளது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, கடையில் அலங்காரத்திற்காக தொங்க விடப்பட்ட சீரியல் விளக்குகளில் இருந்து மின்சாரம் கசிந்துள்ளது. இதை தொட்ட டீ மாஸ்டர் பாலகுரு (50) கீழே விழ, அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் மகன் ரஞ்சித் குமார் (35) என இருவரும் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News December 3, 2025

மதுரை: ஜாமீனில் வந்தவரை கொலை செய்த 3 பேர் கைது

image

மதுரை மீனாட்சிபுரம் பாண்டித்துரை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த அவரை நாடக மேடையில் படுத்து தூங்கிய போது, மர்ம கும்பலால் பாண்டித்துரையை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் விசாரணையில் முன் விரோத காரணமாக கொலை நடந்தது எனவும், பாண்டித்துரையுடன் சுற்றித்திரிந்த செல்லூர் ராஜதுரை (35), மணிரத்தினம் (34), டேவிட் அந்தோணி ராஜ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!