News March 28, 2024
சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு!!

புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. விழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகள் , தேரோட்ட நிகழ்வின் போது நீர் மோர் பந்தல், அன்னதான கூடம் அமைக்க https://foscos.fssai.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி சான்று பெறுவது கட்டாயம் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.
Similar News
News November 17, 2025
மதுரையில் 1,777 பேர் ஆப்சென்ட்

மதுரையில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு டெட் தாள் 2 தேர்வில் 1777 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 52 மையங்களில் தேர்வு நடந்தது, 13 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. போலீஸ் பரிசோதனைக்கு பின் மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
News November 17, 2025
மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி பவன்குமார் 22 மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 4ம் ஆண்டு படித்தார். தல்லாகுளம் பகுதியில் தங்கியவர். சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று மாலை இறந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

மதுரை மாவட்ட காவல் துறையால் கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனம், 6 டூவீலர்கள்) பொது ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் வருகின்ற நவ.18 காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆயுத படை மைதானத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்பும் நபர்கள் நவ.18 காலை 8.00 மணிக்கு தங்களது ஆதார் அட் டையுடன் ரூ. 5,000/ முன் பணம் செலுத்தி பதிவு செய்யலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


