News February 10, 2026

சிதம்பரம்: 50 பவுன் தங்க காசு மாலை வழங்கிய பக்தர்

image

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பொது தீட்சிதர்களிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட பொதுதீட்சிதர்கள் சிறப்பு பூஜை செய்து சிவகாம சுந்தரி அம்பாளுக்கு அணிவித்தனர்.

Similar News

News March 12, 2026

கடலூர்: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’ என்ற ஆப்பின்<<>> மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

கடலூரில் அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம்

image

கடலூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வருகிற மார்ச் 26 நடைபெற உள்ளது. இதில், கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என, கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி தெரிவித்தார்.

News March 12, 2026

கடலூர்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்

image

குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). இவர் தனது மனைவியின் அக்காள் வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள குளியல் அறையில் தனது செல்போனை வைத்துள்ளார். பின்னர் தனது மனைவியின் அக்காள் குளிப்பதை அதில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ராஜ்குமார் மீது நேற்று வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!