News September 13, 2024
சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி

தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராஜேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய சிசிடிவி பொருத்துதல் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும் செப் 18ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
Similar News
News December 13, 2025
தென்காசி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
தென்காசி: வக்கீல் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

தென்காசியில் கடந்த 3ஆம் தேதி முத்துக்குமாரசாமி (46) என்ற வழக்கறிஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பிரமணியனை (48) தேடி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4ம் தேதி நாமக்கல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதில் தற்கொலை செய்து கொண்டவர் சிவசுப்பிரமணியன் என தெரியவந்தது. அவரது உறவினா்கள் நேரில் உறுதிப்படுத்திய பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
News December 13, 2025
தென்காசி: மாணவிகள் கவனத்திற்கு.., கவலை வேண்டாம்

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஏராளமான மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு சிலர் இடையூறு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிவகிரி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு எவரேனும் தொந்தரவு அளித்தால் அவர்களிடமோ, காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


