News September 13, 2024
சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி

தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராஜேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய சிசிடிவி பொருத்துதல் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும் செப் 18ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
Similar News
News December 19, 2025
BREAKING தென்காசியில் 1.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தென்காசி மாவட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தென்காசி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் – 13,75,091. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு உள்ள வாக்காளர்கள் – 12,25,297. நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,51,902. வாக்காளர் பட்டியல் வெளியீடு போது திமுக அதிமுக பாஜக என அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News December 19, 2025
தென்காசி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <
News December 19, 2025
தென்காசி: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட திரிகூடபுரத்தில், ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வேறொரு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவினர் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரிகூடபுரம் பகுதியில் அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


