News November 22, 2024

சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்குட்பட்ட நெய்க்காரப்பட்டியில் நேற்று தனியார் ஹோட்டலில் கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து பழனி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 11, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீரமைப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிரதம மந்திரியின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வரும் டிச.31க்குள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கவும்.SHAREit

News December 11, 2025

திண்டுக்கல்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

வேடசந்தூர் போலீஸிடம் வசமாக சிக்கிய இளைஞர்!

image

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் திண்டுக்கல் வேடசந்தூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன்மகன் இளையராஜா என்பதும், கேரளத்தில் விற்பதற்காக 2 கிலோ கஞ்சாவைக்கடத்திச் செல்வதும் தெரியவந்தது. போலீஸாா்அவரைக்கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செயதனர்

error: Content is protected !!