News January 2, 2025
சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவும் முதல் நேற்று அதிகாலை வரை ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். வடபழனியைச் சோ்ந்த சாருகேஷ் (19), சாலிகிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (19), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீா்செல்வம் (65), நுக்கம்பாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ் (22) என 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 22, 2025
சென்னையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, வண்ணாரப்பேட்டை போதி ராஜ் நகர் 2வது தெருவில் வசிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி சங்கர் (32) மற்றும் அவரது மனைவி வைதேகி (30) இருவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் வைதேகி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பலமுறை அழைத்தும் வராததால், மனமுடைந்த சங்கர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வண்ணாரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 22, 2025
சென்னையில் மாநகர பேருந்து விபத்து!

சென்னை MTC பேருந்து, நேற்று இரவு கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. பணிமனைக்கு பேருந்தை ஓட்டி சென்ற போது, ஓட்டுநர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 22, 2025
சென்னை: காதலி பேச மறுத்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை!

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்டோ சுஜன் (19) பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவருடன் டியூஷனில் படித்த மாணவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் ஆண்ட்டோ சுஜானிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜன் நேற்று முன்தினம் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


