News January 2, 2025

சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

image

சென்னையில் நேற்று 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவும் முதல் நேற்று அதிகாலை வரை ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். வடபழனியைச் சோ்ந்த சாருகேஷ் (19), சாலிகிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (19), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீா்செல்வம் (65), நுக்கம்பாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ் (22) என 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 6, 2025

சென்னை மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

image

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை & புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் ஒரு சிலப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க்

News December 6, 2025

சென்னை பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று செயல்படும் என சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். டிசம்பர் 2ம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் இன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 6, 2025

சென்னை: கல்லூரி மாணவி கடத்தல்.. போலீஸ் அதிரடி

image

சென்னை மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 50 வயது நபரின் 19 வயது மகளை, நேற்று கல்லூரி முடித்து வீடு திரும்பும் வழியில், காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் நொளம்பூர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் காரை பின் தொடர்ந்து, திண்டிவனம் அருகே பெண்ணை பத்திரமாக மீட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட ஷியாம் சுந்தர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!