News January 2, 2025
சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவும் முதல் நேற்று அதிகாலை வரை ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். வடபழனியைச் சோ்ந்த சாருகேஷ் (19), சாலிகிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (19), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீா்செல்வம் (65), நுக்கம்பாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ் (22) என 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 31, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (அக்.31) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8th, SSLC, +2, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
கிராண்ட் மாஸ்டர் ஆன 16 வயது சிறுவன்

சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் இளம்பரிதி செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதித்துள்ளார். இதன்மூலம் அவர் தமிழ்நாட்டில் 35 வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், இந்தியாவின் 90 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். செஸ் வீராங்கனை மற்றும் தேசிய விளையாட்டு அணியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இதற்கு முந்தய 11 ஆட்டத்தில் 9.5 புள்ளிகள் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (30.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.


