News January 2, 2025

சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

image

சென்னையில் நேற்று 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவும் முதல் நேற்று அதிகாலை வரை ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். வடபழனியைச் சோ்ந்த சாருகேஷ் (19), சாலிகிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (19), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீா்செல்வம் (65), நுக்கம்பாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ் (22) என 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 24, 2025

சென்னை: பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை!

image

சென்னை அயனாவரத்தில் 30 வயது பெண் பல் மருத்துவர் குளிப்பதை, ஜன்னல் வழியாக நந்தகோபால் (56) என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஜெரினா பேஹம் உத்தரவின்படி அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நந்தகோபாலை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 24, 2025

சென்னை: கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்

image

பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் லூர்து சார்லஸ் (29). திருமணமாகாத இவருக்கு பேஸ்புக் மூலம் கவுசல்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கவுசல்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, 2குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லூர்து சார்லசுடன், வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் டிச.17ம் தேதி கணவருடன் சென்று விட்டதால், லூர்து சார்லஸ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்துார் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

image

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.

error: Content is protected !!