News August 10, 2024
சாலை விபத்தில் 2 பேர் பலி; இருவர் படுகாயம்

புதுக்குடி அருகே நேற்று இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் படுகாயமடைந்த இரண்டு நபர்களை அருகிலுருந்தவர்கள் மீட்டு மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இறந்து போன இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
புதுகை: சட்ட விரோத மது விற்பனை செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த இளஞ்சாகுடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஐயப்பன் (49) என்பவர் சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News December 4, 2025
புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரிமளம் கே புதுப்பட்டி கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 06.12.2025, காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மருத்துவ சேவைகளும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இதில் சிறுநீரக பாதுகாக்கும் சீர்மிகு திட்டம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்கள் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்
News December 4, 2025
புதுகை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுகை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


