News January 24, 2025
சாலை விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் பலி

குடியாத்தம் பிச்சனூர் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி இவரது மகன் பிரதீப் வயது (20) கல்லூரி மாணவர். இவரும் இவரது நண்பரும் காட்பாடி ரோடு ஆசிரியர் காலனி அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கோபி ரகுராம் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
Similar News
News December 6, 2025
வேலூர்: துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலி!

வேலூர்: தேவரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமு (65), கடந்த 25ம் தேதி, வீட்டின் பின்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த போது, திடீரென அவருடைய வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
வேலூர்: சிறுமி 3 மாதம் கர்ப்பம்.. வாலிபர் மீது போக்சோ!

வேலூர்: காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). இவருக்கும், வேளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பின்னர், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தயார் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.
News December 6, 2025
வேலூர்: குடும்ப பிரச்சனையால் பெண் விபரீத முடிவு!

கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி மணிமேகலை (50). இவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மணிமேகலை, நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


