News May 7, 2025
சாலையை கடந்த புள்ளிமான் பலி

துவரங்குறிச்சி அடுத்த சொரியம்பட்டி அருகே நேற்று இரவு திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மீது சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளிமான் எதிர்பாராத விதமாக மோதியதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. துவரங்குறிச்சி வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் சாலையை கடக்கும் வனவிலங்குகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
திருச்சி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நிகழும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய சூழலில் திருச்சி மாவட்ட பெண்கள் எந்த ஒரு வகையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை மறக்கமால் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
திருச்சி: 6 நாட்களுக்கு தடை விதிப்பு

வையம்பட்டி அடுத்த வீரமலைபாளையம் குண்டு சுடும் பயிற்சி தளத்தில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தலைமையிடமாக கொண்ட இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள் வரும் நவ.,27-ம் தேதி முதல் டிச.,2-ம் தேதி வரை குண்டு சுடும் பயிற்சி செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வீரமலைபாளையம் பகுதியில் நாளை முதல் 6 நாட்களுக்கு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
திருச்சி: லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி பகுதியில் நள்ளிரவில் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


