News April 18, 2025

சாலையை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதி பலி

image

பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்று மாலை பாம்பன் பகுதியிலிருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் சென்றார். போதையில் பிரச்னை செய்ததால், இவரை வேதாளை பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் இறக்கி விட்டார். அங்கு சுற்றித் திரிந்த ஆறுமுகம் நேற்றிரவு (ஏப்-17) சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

ராமேஸ்வரம் மாணவி கொலை: சாட்சியை காக்க கோரிக்கை

image

ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி ஷாலினியை ஒரு தலையாக காதலித்த போதை இளைஞர் முனியராஜ் 21, கத்தியால் குத்திக்கொலை செய்தார். ஷாலினியுடன் மற்றொரு பிளஸ் 2 மாணவியும் உடன் சென்றுள்ளார்.அவரை போலீசார் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர்.அந்த மாணவிக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News November 21, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.

News November 21, 2025

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற முதுகுளத்தூர் மாணவி

image

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி மலர் என்ற மாணவி தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இண்டர்நேஷனல் 2025 போட்டியில் கலாச்சார தூதர் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து மாணவி ஜோதி மலர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!