News August 15, 2024

சார் ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

image

பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தனது வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆக.,20ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Similar News

News August 9, 2025

ராமநாதபுரம் வழுதூரில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

ராமநாதபுரம், வழுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோவிந்தனின் மகன் பிரபு பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 9, 2025

ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி.?

image

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த் துறையில் 29 காலிப் பணியிடங்கள் உள்ளது.
▶️10 ஆம் வகுப்பு தேர்ச்சி
▶️சைக்கிள்/பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
▶️விண்ணப்பதாரர் அதே தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ தமிழில் எழுத/ படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️ செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும்.
▶️மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை
இந்த லிங்கில் விண்ணப்பம் <>டவுன்லோட்<<>> செய்து APPLY பண்ணுங்க.

News August 9, 2025

ராமநாதபுரம் மக்களே..! நூதன மோசடி; உஷார்

image

இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயரால் ஸ்காலர்ஷிப் என்று சொல்லி, QR code, வங்கி கணக்கு, OTP கேட்டு பணம் மோசடி செய்பவர்கள் மீது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

error: Content is protected !!