News August 15, 2024

சார் ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

image

பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தனது வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆக.,20ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Similar News

News November 12, 2025

நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்திற்கு வருகை

image

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடங்கி உள்ளார். இப்பயணம் மேற்கொண்டுள்ள நயினார் நாகேந்திரன் நவ.13ல் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உரை ஆற்ற உள்ளார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.

News November 11, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (நவ.11) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News November 11, 2025

காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஐஜி

image

இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வு கூட்டம் இன்று (நவ.11) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு, காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

error: Content is protected !!