News August 8, 2024

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

image

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

Similar News

News October 27, 2025

மானாமதுரை அருகே வீட்டிற்குள் புகுந்து 40 பவுன் கொள்ளை

image

மானாமதுரை அருகே தயாநகரில் மாரியப்பன், மகன் சண்முகப்பிரியன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தீபாவளி அன்று குடும்பத்தினர் நேற்று மானாமதுரைக்கு வந்த போது வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.பேசாலீசார் விசாரித்துெ வருகின்றனர்.

News October 27, 2025

சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மற்றும் காமராஜர் காலனி, பையூர், காஞ்சிரங்கால், வந்தவாசி கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி சுந்தர் நடப்பு, சோழபுரம், சூரக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் நாளை (அக் -28) காலை 10மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்

News October 26, 2025

சிவகங்கை: பாஜக நிர்வாகி கொலை; ஒருவர் கைது.!

image

சிவகங்கை வாரச் சந்தை அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவர் சதீஷ் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடா்பாக சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம், அழகா்கோவில் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கை சிவகங்கை மாவட்ட போலீசார் நேற்று கைது செய்தனா்.

error: Content is protected !!