News January 24, 2025
சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று (ஜன.23) தொடங்கியது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சார்நிலை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
Similar News
News February 23, 2026
கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து!

ஆலத்தூர் அருகே அரியபெருமானூர் சாலையில் நேற்று ஒரே பைக்கில் 4 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது பைக் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் (Center Median) மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். தற்போது அவர்களுக்குக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News February 23, 2026
கள்ளக்குறிச்சி: தந்தைக்கு எமனாக மாறிய மகன்!

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவராஜ் மது அருந்திவிட்டு வந்து விஷ்வாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தேவராஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரில் மறைந்திருந்த விஷ்வாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News February 23, 2026
கள்ளக்குறிச்சி: தந்தைக்கு எமனாக மாறிய மகன்!

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவராஜ் மது அருந்திவிட்டு வந்து விஷ்வாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தேவராஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரில் மறைந்திருந்த விஷ்வாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.


