News April 13, 2025

சார்ஜில் இருந்த இ-பைக் எரிந்து நாசம்

image

திருப்பத்துார், வாணியம்பாடி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் முனீர் அஹமத் (56). இவர் நேற்று மதியம் தன்னுடைய இ-பைக்கை, வீட்டின் போர்டிகோவில் சார்ஜிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக இ-பைக் எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து, உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தி அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Similar News

News January 1, 2026

திருப்பத்தூரில் கரண்ட் கட் – உங்க பகுதி இருக்கா?

image

திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர்நாடு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஜன.3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர், மடவாளம், மாடப்பள்ளி, தாதனவலசை, கந்திலி, பாச்சல், ஜலகாம்பாறை, புதூர்நாடு, ஜெயபுரம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், அன்னசாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

திருப்பத்தூர்: பட்டப்பகலில் துணிகர சம்பவம்!

image

நாட்றம்பள்ளி அடுத்த அதிபெரமனூரை சேர்ந்தவர் மாணிக்கம் (61) இவர் வீட்டில் நேற்று (டிச.31) வாணியம்பாடி அருகே தும்பேரியை சேர்ந்த மீனா, பட்டப்பகலில் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை & ரொக்க பணத்தை திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் மூதாட்டியை கைது செய்தனர்.

News January 1, 2026

நாட்டறம்பள்ளி அருகே தங்க நகை திருட முயன்ற மூதாட்டி கைது

image

நாட்டறம்பள்ளி அடுத்த அதிபெரமனூர் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 61) இவர் வீட்டில் இன்று (டிச.31)வாணியம்பாடி அருகே தும்பேரி சேர்ந்த மீனா என்பவர் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலிசார் மூதாட்டியை கைது செய்தனர்.

error: Content is protected !!