News August 18, 2024

சாரல் திருவிழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

image

குற்றாலத்தில் சாரல் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (ஆக.18) காலை முதல் கலைவாணர் கலை அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆணழகன் போட்டி, கோலப் போட்டி, யோகா,  நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, தோல் பாவை கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தனது குடும்பத்தினரோடு மக்களோடு மக்களாக இருந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

Similar News

News October 31, 2025

தென்காசி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்

image

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் -படியும். தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலர் (பொதுத் தேர்தல்) சென்னை, அறிவுரையின்படியும் தென்காசி மாவட்டத்தில் 01.01.2026-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 04.11.2025 முதல் 4.12.2025 வரை ஒரு மாத காலம் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

News October 31, 2025

தென்காசி: 12th முடித்தால் கிராமப்புற வங்கி வேலை உறுதி!

image

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE IT.

News October 31, 2025

தென்காசி: பள்ளி மாணவி தற்கொலை

image

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பவி இன்ஷா (14). இவர் நேற்று காலை, தனக்கு காது வலிப்பதாக தாயிடம் கூறினாராம். அதற்கு தாய் மருந்து போட்டு பள்ளிக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!