News April 14, 2025
சாயல்குடியில் சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி

சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு சொர்ணநாதன். இவரின் 13 வயது மகள் & அவரது உறவினரின் மகன்(14) இருவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு (ஏப்.13) கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகாவை சேர்ந்த சொகுசு கார் மோதியதில் இருவரும் பலியாயினர். சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை ரயில்கள் இயங்காது

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் ரயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.2025) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார் என ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 28, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். *ஷேர்


