News April 14, 2025

சாயல்குடியில் சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி 

image

சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு சொர்ணநாதன். இவரின் 13 வயது மகள் & அவரது உறவினரின் மகன்(14) இருவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு (ஏப்.13) கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகாவை சேர்ந்த சொகுசு கார் மோதியதில் இருவரும் பலியாயினர். சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

ராமநாதபுரத்தில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 109 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் சென்ன உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மது நுகர்வோர் விட்டுச்செல்லும் காலி மதுபான புட்டிகள் காரணமாக ஆங்காங்கே உடைந்து கிடந்து பொது மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் சுற்று சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நவ.26ம் தேதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

News November 25, 2025

ராநாதபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

image

ராமநாதபுரம் மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 25, 2025

ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!