News April 14, 2025
சாயல்குடியில் சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி

சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு சொர்ணநாதன். இவரின் 13 வயது மகள் & அவரது உறவினரின் மகன்(14) இருவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு (ஏப்.13) கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகாவை சேர்ந்த சொகுசு கார் மோதியதில் இருவரும் பலியாயினர். சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
ராம்நாடு: 10th தகுதி., ரூ.71,000 சம்பளம்! நாளை கடைசி

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News September 18, 2025
ராம்நாடு: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 18, 2025
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி நான்கு வழிச் சாலையில் இன்று (செப். 18) காலையில் மதுரையில் இருந்து வந்த டாடா மினி லாரியும், எதிரே வந்த மினி லாரியும் அங்குள்ள பேக்கரி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மினி லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அருகே நின்றிருந்த 3 கார்களும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து பரமக்குடி சரக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.