News December 5, 2024
சாம்சங் விவகாரம்- பதிவுத்துறைக்கு ஆணை

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஐடியு தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை இல்லை என சாம்சங் நிறுவனம் வாதிட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
காஞ்சி: இனி கையில் ஆதார் கார்ட் தேவையில்லை

காஞ்சி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 7, 2026
காஞ்சி: வீட்டின் பின்புறம் நேர்ந்த விபரீதம்

உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தந்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகம்மா (75). இவர் கடந்த 1-ந்தேதி வீட்டின் பின்புறம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
காஞ்சி: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு க்ளிக் செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


