News April 3, 2025
சாந்தமாக காட்சி தரும் பரிக்கல் நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் பரிக்கலில் உள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில். நரசிம்மர் பொதுவாக ஆக்ரோஷமான தெய்வமாக அறியப்படுவதால் கோயில்களில் பெரும்பாலும் லக்ஷ்மியை மடியில் வைத்துள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுவர். ஆனால் இங்கு நரசிம்மர் சாந்தமாக காட்சி தருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான ஆலயமாக உள்ள இங்கு வந்து வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 18, 2025
இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

விழுப்புரத்தில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<
News April 18, 2025
கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்திலிருந்த 55 அடி ஆழ கிணற்றில் நேற்று காலையில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், பரஞ்ஜோதி மற்றும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வெளியே எடுத்தனர். பசுவை மீட்ட வீரர்களை சுற்று வட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர்.