News April 2, 2025
சாத்தூரில் தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

சாத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சர்க்கரைதாஸ்(48) என்பவர் 7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு மாணவியின் தாயார் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரனை நடத்தி சர்க்கரைதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 10, 2026
விருதுநகர்: ராணுவ அதிகாரி வீட்டில் 14.5 பவுன் நகை திருட்டு.!

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால், 41. இவர் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தன் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப் பட்டு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது 14.5 பவுன் நகை,வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 9, 2026
விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 9, 2026
விருதுநகர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


