News April 2, 2025

சாத்தூரில் தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

image

சாத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சர்க்கரைதாஸ்(48) என்பவர் 7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு மாணவியின் தாயார் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரனை நடத்தி சர்க்கரைதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News December 27, 2025

விருதுநகர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

image

வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41).இவர் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து விசாரித்த போது, கோபாலபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (30) என்பவர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.இது குறித்து புகாரில் வத்திராயிருப்பு போலீசார் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

News December 27, 2025

விருதுநகர் மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

image

விருதுநகர் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள இன்று 27ம் தேதி, நாளை 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <>க்ளிக் <<>>செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

News December 27, 2025

ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி கலந்து கொண்டு ரேபிஸ் நோயின் பாதிப்புகள் குறித்தும், ரேபிஸ் நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

error: Content is protected !!