News April 13, 2025
சாத்தான்குளம்: மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இப்ராஹிம் நடுநிலைப் பள்ளியில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் டாக்டர் ரகுமான் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்கு அடுத்தது என்ன படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்? என்பது குறித்த சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. *மேற்படிப்பு செல்லும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்* *ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 1, 2025
NOTE: தூத்துக்குடியில் 300க்கும் மேலான காலியிடங்கள்!

தூத்துக்குடி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவ. 7ம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 300க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது உதவும்.
News November 1, 2025
தூத்துக்குடியில் 3 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக். 6ல் குலசைப் பகுதியில் நடந்த கொலை வழக்கில் நாசரேத் பகுதியை சேர்ந்த மூர்த்திராஜா (27), குலசை முத்துச்செல்வன் (27) கைதாகினர். ஆறுமுகநேரியில் கொலை முயற்சி வழக்கில் திருச்செந்தூரை சேர்ந்த சூர்யா (23) கைதாகினார். மேற்கண்ட 3 பேரையும் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
News November 1, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளதாவது, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உளுந்து, பாசி பயிர் செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 30ஆம் தேதிக்குள்ளும் பதிவு செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.


