News October 23, 2024

சாதி வன்கொடுமை புகார்: திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் புகார்களை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பதிவு செய்யலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 28, 2026

திருப்பூர்: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய தேவையில்லை!

image

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT.

News February 28, 2026

திருப்பூர்: அடுத்தடுத்து தற்கொலை! அதிர்ச்சி

image

திருப்பூர் மாவட்டத்தில் கண்டியன்கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (60) உடல்நலக் குறைவால் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். குருவாயூரப்பன் நகர் வாசுகி (33) குழந்தையில்லாத மனஉளைச்சலில் தற்கொலை செய்தார். கிருஷ்ணாநகர் தங்கராஜ் (41) குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2026

திருப்பூரில் வெளிநாட்டினருக்கு 2 ஆண்டு சிறை

image

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில் சட்டவிராதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தப்பா அல் அமின், ஜாஸ் கஞ்சகான் அலி, முகமது மொனிருள் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!