News February 16, 2025

சலுகை வழங்க உறவினர்களிடம் ‘ஜிபே’ வசூல்; காவலர் சஸ்பெண்ட்

image

மதுரை சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது ‘ஜிபே’ மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

Similar News

News December 16, 2025

கோரிப்பாளையம் மேம்பாலம் பணி: பிரபல சிலை அகற்றமா.?

image

மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக தல்லாகுளம் பகுதியில் தியாகிகள் நினைவு ஸ்தூபி, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அகற்றப்பட்டுள்ளது. இதே போல் தமுக்கம் மைதானம் முன் உள்ள தமிழன்னை சிலை அகற்றப்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை மதுரை கோட்ட பொறியாளர் மோகன் காந்தி கூறியது: மேம்பாலம் பணிக்காக தமுக்கம் தமிழன்னை சிலை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்றார்.

News December 16, 2025

மதுரை: ஆயுதப்படை போலீஸ் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

image

விராதனூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார்(31) சென்னை நகர ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். டிச14 சென்னையிலிருந்து உறவினர்கள் 5 பேருடன் இரயிலில் வந்ததாகவும், இடையில் ஒரு நிறுத்தத்தில் இறங்கியவர் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. எனவே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? (அ) தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 16, 2025

காந்தி மியூசியத்தில் இலவச தியான பயிற்சி

image

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச தியான தினமான டிசம்பர் 21 ல் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை உள் அமைதி உலகளாவிய நல்லிணக்கம் எனும் தலைப்பில் இலவச தியான பயிற்சி நடக்கிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம், முன்பதிவிற்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸை நேரிலோ 99941 23091 என்ற வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!