News February 16, 2025

சலுகை வழங்க உறவினர்களிடம் ‘ஜிபே’ வசூல்; காவலர் சஸ்பெண்ட்

image

மதுரை சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது ‘ஜிபே’ மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

Similar News

News November 20, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

உசிலம்பட்டி மற்றும் தும்மக்குண்டு மின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணியால், உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, K.போத்தம்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள் கோவில்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டியில் இன்று (நவ.20) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

News November 20, 2025

மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 20, 2025

மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!