News April 7, 2025
சரக்கு வேன் மோதி 2 பேர் பலி

ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த டெல்லிபாபு (62), நேற்று (ஏப்ரல் 6) மதியம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பழனி (62) என்பவருடன் ஆம்பூருக்கு பைக்கில் புறப்பட்டார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் டெல்லிபாபு சம்பவ இடத்திலும், பழனி மருத்துவமனையிலும் இறந்தனர்.
Similar News
News October 17, 2025
திருப்பத்தூர்: சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.17) மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி வருகை தந்தவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். இதில் 15ம் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் 200ம் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
News October 17, 2025
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க, மழைக்கால விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘மழை நேரத்தில் மின்கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், மின்சார கம்பியின் மீது தண்ணீர் இருப்பதால் மின்சாரம் தாக்கி உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மற்றும் பழைய கட்டிடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்த்திடவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
News October 17, 2025
திருப்பத்தூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

திருப்பத்தூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)