News November 23, 2024
சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வேளாண்மை – உழவர் நலத்துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான சம்பா நெற் பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். பதிவு செய்யாத விவசாயிகள், விரைவாக இ-சேவை மையத்துக்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
Similar News
News July 6, 2025
காஞ்சியில் அமைப்பாளர் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக சார்பில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக வழக்கறிஞர் இ எல் கே கண்ணன் திமுக சார்பில் திமுக மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சுந்தர் நியமித்தார். மேலும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கண்ணனுக்கு கட்சியின் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News July 5, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
சக்தி வாய்ந்த பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோயில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோயில் 50 வது திவ்ய தேச கோயிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது. மேலும் கல்வி செல்வமும் பெருகும். தெரிந்தவகர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.