News April 18, 2025

சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <>விண்ணப்பம்<<>>

Similar News

News November 16, 2025

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

image

திருவள்ளுவர் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News November 15, 2025

திருவள்ளூர்: பெண் வெட்டிப் படுகொலை!

image

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனியில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்ற பெண் நகைக்காக நேற்றிரவு(நவ.14) சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் காது, கழுத்தில் இருந்த நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!