News August 18, 2024

சனி பிரதோஷத்தில் நந்திக்கு சிறப்பு பூஜைகள்

image

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு பிரதோஷ பூஜையை காண மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலில் குவிந்தனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Similar News

News November 19, 2025

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.21 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

விருதுநகரை உலுக்கிய கொலையில் மேலும் ஒருவர் கைது

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் ஏற்கனவே ஒருவர் சுட்டு பிடிக்கப்பட்டு நிலையில் மற்றொரு குற்றவாளி முனியசாமியை போலீசார் ட்ரோன் மூலம் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

விருதுநகர் மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!