News March 25, 2025
சந்தன மரம் கடத்திய மூன்று பேர் கைது

தமிழக கேரளா எல்லையான ஆரியங்காவு கடமான் பாறை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியரை கற்குடியை சேர்ந்த மணிகண்டன் ( 27 ), அஜித்குமார் (22), குமார் (35 ) ஆகிய மூன்று பேர் மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை நேற்று போலீசார் கைது செய்து மரங்களை பறிமுதல் செய்தனர் .
Similar News
News November 24, 2025
தென்காசி பஸ் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு!

தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகி இருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
News November 24, 2025
தென்காசியில் இன்று வெளுக்க போகும் மழை!

தென்காசி மாவட்டத்தில் இன்று மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்திற்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டுள்ளது.
News November 24, 2025
JUSTIN: தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த்தாக தகவல் வழியாக உள்ளது இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சிக்கிய உள்ள பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


