News March 25, 2025

சந்தன மரம் கடத்திய மூன்று பேர் கைது

image

தமிழக கேரளா எல்லையான ஆரியங்காவு கடமான் பாறை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில்  வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியரை கற்குடியை சேர்ந்த மணிகண்டன் ( 27 ), அஜித்குமார் (22), குமார் (35 ) ஆகிய மூன்று பேர் மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை நேற்று போலீசார் கைது செய்து மரங்களை பறிமுதல் செய்தனர் .

Similar News

News December 4, 2025

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு

image

தமிழ்நாட்டில் தனித்துவமான வேளாண் பொருட்களை கண்டறிந்து அவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. புளியங்குடி (தென்காசி) எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

News December 4, 2025

நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!