News January 24, 2025
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதல்வரின் கவனத்தை ஈர்க்க தலைநகரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (ஜன.23) நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், ரூ.3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டினை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News November 18, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க


