News January 24, 2025
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதல்வரின் கவனத்தை ஈர்க்க தலைநகரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (ஜன.23) நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், ரூ.3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டினை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News October 15, 2025
திருவள்ளூர்: லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ரெய்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லோகநாதன். இவரது வீடு காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததில் ரூ.1.24 பணத்தை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் தற்போது காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறையின் உத்தரவின் பேரில் லோகநாதன் வீட்டில் சோதனை மேற்கண்ட போது கணக்கில் வராத ரூ.84,000 பணத்தைபறிமுதல் செய்தனர்.
News October 15, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளுர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் புதன்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமை திருவள்ளுர், இரண்டாம் புதன்கிழமை திருத்தணி, மூன்றாம் புதன் கிழமை பொன்னேரி, நான்காம் புதன் கிழமை ஆவடி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 15, 2025
திருவள்ளூர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள்<