News October 24, 2024

சத்திரக்குடி அருகே விபத்து; ஓட்டுநர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் கனி(27). கார் ஓட்டுநரான இவர் நேற்று(அக்.23) 3 பேரை ராமேசுவரத்துக்கு காரில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சத்திரக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எதிரே வந்த லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் கனி உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 26, 2025

BREAKING ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று (நவ 26) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News November 26, 2025

இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

image

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 26, 2025

இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

image

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!