News January 1, 2025
சத்குரு கொண்டாடிய புத்தாண்டு விழா

கோவை ஆலாந்துறையில், ஈஷா சார்பாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு, சத்குரு பேசுகையில் “அடுத்த ஆண்டில் நாம் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிரச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம், இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும் என்றார்.
Similar News
News November 16, 2025
கோவையில் இலவச Data Analytics பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics-Google பயிற்சி வழங்கப்படுகிறது. 37 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Data Analytics -இல் உள்ள Advanced Excel, Advanced SQL, Statistics,Tableau, Power BI ஆகிய அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News November 16, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பட்டணம் , பட்டணம் புதூர் , சத்தியநாராயணபுரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம். ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 16, 2025
கோவையில் வசமாக சிக்கிய நபர்!

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆர்.எஸ். புரம் காவல்துறையினருக்கு நேற்று முந்தினம் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குப் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பாலச்சந்திரன் (57) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.


