News January 1, 2025
சத்குரு கொண்டாடிய புத்தாண்டு விழா

கோவை ஆலாந்துறையில், ஈஷா சார்பாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு, சத்குரு பேசுகையில் “அடுத்த ஆண்டில் நாம் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிரச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம், இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும் என்றார்.
Similar News
News November 18, 2025
கோவையில் வசமாக சிக்கிய நேபாள சிறுவன்!

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள நெகமம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பிரகாஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.25000 திருடு போனது தெரிய வந்தது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது நேபாள சிறுவனை கைது செய்தனர்.
News November 18, 2025
கோவையில் வசமாக சிக்கிய நேபாள சிறுவன்!

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள நெகமம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பிரகாஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.25000 திருடு போனது தெரிய வந்தது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது நேபாள சிறுவனை கைது செய்தனர்.
News November 18, 2025
கோவை: மட்டன் கடைக்குள் புகுந்த கார் மோதி மூதாட்டி பலி!

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் அருண் பிரகாஷ் நேற்று காரில் வாடிக்கையாளர்களுடன் நரசிம்மநாயக்கன்பாளையம் புதுப்பாளையம் சாலையில் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மட்டன் கடைக்குள் புகுந்தது.இந்த விபத்தில் மூதாட்டி சின்னம்மாள் என்பவர் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


