News January 1, 2025

சத்குரு கொண்டாடிய புத்தாண்டு விழா

image

கோவை ஆலாந்துறையில், ஈஷா சார்பாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு, சத்குரு பேசுகையில் “அடுத்த ஆண்டில் நாம் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிரச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம், இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும் என்றார்.

Similar News

News November 14, 2025

கோவை: திறம்பட செயல்பட்ட 51 காவலர்களுக்கு பாராட்டு

image

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 51 காவலர்களை பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். கூட்டத்தில், கோவை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

News November 13, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (13.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

ஆன்லைன் விண்ணப்பத்தில் குழப்பங்கள்: அண்ணாமலை!

image

கோவை சின்னியம்பாளையத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பல குழப்பங்கள் உள்ளன. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி உடனே தீர்வு காண வேண்டும் என்றார். மேலும் நவ.19 அன்று பிரதமர் மோடி கோவையில் இயற்கை விவசாயிகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். 

error: Content is protected !!