News August 2, 2024
சதுரகிரி வந்த SI மாரடைப்பால் மரணம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 – 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.,2) திருப்பூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த பாலசுப்பிரமணி என்பவர் சதுரகிரி கோயிலுக்கு நடந்து செல்லும்போது பசுகிடை என்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News November 23, 2025
விருதுநகரில் லைன்மேன் உதவி வேண்டுமா..!

விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 23, 2025
விருதுநகர்: ஆசிரியர் அடித்ததில்.. மாணவருக்கு ஆபரேஷன்

விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10th படிக்கும் மாணவரை, வகுப்பறையில் நவ., 17ல் சமூக அறிவியல் ஆசிரியர் குமார் பிரம்பால் அடித்தார். அப்போது, அருகே அமர்ந்திருந்த மாணவரின் இடது கண்ணில் பிரம்படி பலமாக விழுந்ததால், கருவிழியில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 23, 2025
விருதுநகர்: உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


