News April 18, 2025

சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.

Similar News

News October 23, 2025

விருதுநகர்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 90131-51515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 23, 2025

செல்போன் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை

image

தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வீரராகவன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 20). பட்டாசு தொழிலாளியான இவர் தீபாவளிக்கு புதிய செல்போன் வாங்கி தர பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஒரு வாரம் கழித்து வாங்கித்தருவதாக பெற்றோர் கூறியதால் வீட்டை விட்டுவிட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. அவரை தேடியபோது சத்திரப்பட்டியில் உள்ள பட்டாசு கடை முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

News October 23, 2025

விருதுநகர் அருகே இரு டூவீலர்கள் மோதி கோரம்.. ஒருவர் பலி

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 38 லாரி ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நாரணாபுரம் விளக்கில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் நின்று இருசக்கர வாகனத்தில் மோதி விஜயகுமார் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!