News April 18, 2025
சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
Similar News
News November 20, 2025
விருதுநகர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

விருதுநகர் மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 20, 2025
விருதுநகர் அருகே போக்குவரத்து மாற்றம்

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி – விருதுநகர் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை சார்பாக இத்தகவல் தொடர்பான பேனர் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர், பாலவநத்தம் செல்லும் அனைத்து வாகனங்களும் அரசு மருத்துவமனை அருகே உள்ள சுக்கிலநத்தம் சாலை வழியாக மாற்றுப்பாதையில் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
News November 20, 2025
விருதுநகர்: ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மூவர் பலி

தென்காசி, சிவகிரி சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 45, சங்கரன்கோவில் ரோட்டில் தனியார் மில்லில் பணி முடிந்து சாலையை கடந்த போது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் 45, தென்காசி ரோட்டில் டூவீலரில் வந்த போது மதுரையை சேர்ந்தவர் டூ வீலர் எதிரெதிரே மோதியதில் மகேஷ் உயிரிழந்தார். அதேபோல் சேத்துார் சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் 48 விபத்தில் பலியானார்.


