News April 18, 2025
சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
Similar News
News September 17, 2025
அருப்புக்கோட்டையில் சாமி சிலை உடைப்பு

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையம்பட்டி அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இருவாக்காளியம்மன் கோவில். இன்று காலையில் இருவக்காளியம்மன் சுவாமியின் சிலை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
விருதுநகர் மாவட்டத்தின் அடிப்படை உதவி எண்கள்

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி தகவல் அளிக்க உதவி எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
விருதுநகர்: காவல்துறை சிசிடிவி கேமரா சேதம், 4 பேர் கைது

சித்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் நேற்று இந்த சிசிடிவி கேமராக்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக தகவல் வந்தது. இந்நிலையில் திருச்சுழி போலீசாரின் விசாரணையில் கேமராக்களை சேதப்படுத்தியதாக வயல்சேரியை சேர்ந்த மணிகண்டன், சித்தலக்குண்டை சேர்ந்த தமிழ்சிங்கம், ராம்குமார் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.