News August 16, 2024
சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் அனுமதி

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 17 முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News November 25, 2025
விருதுநகர்: வழிபறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் கைது

சிவகாசி பள்ளப்பட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராமர் 42. பழக்கடை நடத்தி வரும் இவர் கடையில் இருந்த போது அங்கு போதையில் வந்த திருத்தங்கல் தெற்கு தெரு சாமுவேல், முருகன் காலனி சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ராமரை அடித்து ரூ. 2 ஆயிரம் பறித்தனர்.மேலும் அரிவாள், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரித்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.
News November 25, 2025
விருதுநகர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

விருதுநகர் மக்களே சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 25, 2025
விருதுநகர்:பெண் போலீசாரிடம் தகராறு; போலீஸ்காரர் இடமாற்றம்

விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது.கார்த்திகேயனின் மனைவி,போலீசில் புகார் அளித்ததில் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட கார்த்திகேயன் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.


