News August 16, 2024

சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 17 முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 28, 2025

BREAKING விருதுநகரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. SHARE IT

News November 28, 2025

BREAKING விருதுநகரையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

image

அருப்புக்கோட்டை அருகே 2022 இல் பாலவநத்தம் – கோபாலபுரம் சாலையில் உறவினரை தாக்கி 43 வயது பெண்னை சிறுவன் உட்பட 7 பேர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து செயினை பறித்து சென்ற சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியது. இதில் சிறுவன் மீதான வழக்கு இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மற்ற 6 பேருக்கும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி விரைவு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News November 28, 2025

விருதுநகரில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்.

error: Content is protected !!