News April 5, 2025

சதுரகிரியில் மலையேற பக்தர்களுக்கு தடை

image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி வியாழக்கிழமை முதல் அமல் படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.

Similar News

News April 9, 2025

விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் சூலக்கரையில் நாளை மறுநாள்(ஏப்.11) காலை 10 – 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கலந்து கொள்ளலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 9, 2025

ஊசி செலுத்திய பெண் திடீர் மரணம்

image

சிவகாசி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி மகேஸ்வரி (35). இவருக்கு நேற்று தலைவலி ஏற்பட்டதால் சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது ஊசி செலுத்தியுள்ளனர். பின்னர் வீட்டில் வந்து தூங்கிய மகேஸ்வரிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2025

கந்துவட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல்

image

ஏழாயிரம்பண்ணை அருகே கண்டியாபுரத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி ராசகுரு (27), அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையிடம் ₹15,000 வட்டிக்கு பணம் பெற்று, சரிவர பணம் செலுத்தாததால், ராசகுருவின் இருசக்கர வாகனத்தை, செல்லத்துரை பறிமுதல் செய்துள்ளார். பின்னர், மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் செலுத்தக் கூறி கொலை மிரட்டல் விடுத்துளார். இதுகுறித்த புகாரில்பேரில் செல்லத்துரை மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!