News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

Similar News

News December 16, 2025

அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தினால் கடும் தண்டனை

image

அனுமதியின்றி ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 15, 2025

மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (15.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

மதுரையில் இதுபோன்ற பல தூண்களை காணலாம் – அறநிலையத்துறை

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில், மதுரையின் பல மலைகள், சமணர் மலை, மேலூர் என பல இடங்களில் தூண் உள்ளது என அறநிலையதுறை கூறியுள்ளது. நாகமலை, பசுமலை, அழகர்மலை, சித்தர்மலையிலும் இதுபோன்ற தூண்களை காணலாம். மதுரையை சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் தூண்களின் படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்ததுள்ளது. வரலாற்று ஆய்வாளர் சீனிவாசன் எழுதிய சமண தூண்கள் குறித்த புத்தகமும் சமர்ப்பிக்பட்டுள்ளது.

error: Content is protected !!