News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

Similar News

News December 14, 2025

மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0452-2531395) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 14, 2025

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் தொழிலாளி பலி

image

மதுரை உசிலம்பட்டி கொங்கபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 21. ஓட்டல் தொழிலாளியான இவர் பணி முடிந்து நேற்றிரவு 7:20 மணியளவில் வீடு திரும்ப ரோட்டை கடக்கும் முயன்ற போது மதுரையில் இருந்து கம்பம் சென்ற, அரசு பஸ் மோதி அவர் பலியானார். இது குறித்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

News December 14, 2025

மதுரை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

மதுரை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!