News February 15, 2025
சட்டவிரோதமாக.. விசைப்படகு மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

பாக்ஜல சந்தி கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பில் காரைக்கால் மற்றும் நாகை மயிலாடுதுறை மாவட்ட விசைப்படகுகள் ஈடுபடுகின்றன. இதனால் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச்.1ஆம் தேதி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாட்டுப் படகு மீனவர் சங்க மாநில பொருளாளர் நம்புதாளை ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
ஹஜ் பயணம்.. ராம்நாடு கலெக்டர் அறிவிப்பு!

2026ல் ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழக பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை. தகுதி வாய்ந்தவர்கள் www.hajcommittee.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
ராம்நாடு: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News October 31, 2025
ராம்நாடு: திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவாடானை (தா) கட்டுகுடி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி-க்கும் (23) சிவகங்கையை சேர்ந்த சரண்ராஜூக்கும் 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு காளீஸ்வரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 28ம் தேதி இரவு இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ராம்நாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.


