News June 27, 2024
சட்டம் பயில மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி

கோவை மாவட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் சட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேற்று (ஜுன் 26) மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
கோயம்புத்தூரில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (டிச.10) மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழு மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். எந்த வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை. இது 14-வது மிரட்டல் என குறிப்பிடப்படுகிறது. பின் மெயில் அனுப்பியவர் குறித்து சைபர் கிரைம் விசாரணை நடைபெறுகிறது.
News December 10, 2025
மாணவி வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிக்கை வழங்கல்

கோவையில் கல்லூரி மாணவி மீது நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி, தவசி, காளீஸ்வரன் ஆகிய மூவருக்கும் இன்று (டிச.10) குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இவர்களின் காவல் 17-ம் தேதி வரை நீடிப்பதுடன், டிச.12 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக்க உத்தரவிடப்பட்டது. வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 10, 2025
கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


