News August 24, 2024

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் நேற்று (ஆக.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 8, 2025

தூத்துக்குடி: ஒரே நாளில் மூன்று பேர் மீது குண்டாஸ்

image

கோரம்பள்ளம் அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கில் மேல வாகை குலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் சுடலைக்கண்ணு இசக்கி பாண்டி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இந்த மூன்று பேரையும் புதுக்கோட்டை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

News November 8, 2025

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை

image

கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கயத்தாறை தேர்ந்த காளீஸ்வரன் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் காளீஸ்வரனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!