News April 13, 2025

சட்டத்தை மீறியவர்களுக்கு பாடம்:  4 பேர் மீது  பாய்ந்தது வழக்கு!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி கருப்ப நாயக்கன் குளம் அருகே அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்பட்டதாக ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, வெங்கடாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 18, 2025

கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள் !

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை: 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:04324-257510
▶️காவல் கட்டுப்பாட்டு அறை: 100
▶️விபத்து உதவி எண்: 108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு :101
▶️விபத்து அவசர வாகன உதவ: 102
▶️மருத்துவ உதவி எண்:104
▶️குழந்தைகள் பாதுகாப்பு: 1098
▶️பேரிடர் கால உதவி:1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி:1091
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 18, 2025

கரூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற ஆப்பை பயன்படுத்தி பயணிகள் பயன்பெறலாம்.உங்கள் புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 18, 2025

கரூரில் பாலியல் பெண் புரோக்கர் கைது !

image

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்தனர்.

error: Content is protected !!