News August 10, 2024

சங்கராபுரம் நீதிமன்றத்தில் மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் ஆகிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நீதிமன்ற அன்றாட அலுவலகப் பணிகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சௌந்தர் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர். இதில், சங்கராபுரம் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

Similar News

News December 12, 2025

கள்ளக்குறிச்சியில் கல்வி உதவித்தொகை வேண்டுமா..?

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு <>இந்த இணையதளத்தில்<<>> 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News December 12, 2025

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் நேற்று(டிச.11) தொடங்கினார்.

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் திருத்தமா..?

image

பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம் நாளை (நவ.13) தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

error: Content is protected !!