News August 10, 2024

சங்கராபுரம் நீதிமன்றத்தில் மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் ஆகிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நீதிமன்ற அன்றாட அலுவலகப் பணிகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சௌந்தர் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர். இதில், சங்கராபுரம் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

Similar News

News December 5, 2025

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

கள்ளக்குறிச்சி: தங்க மோதிரத்தை தொலைத்த மாணவி விபரீத முடிவு!

image

மேல்வாழப்பாடியை சேர்ந்த சக்திவேல், செல்வியின் மகள் கௌரி (17), சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த கௌரியிடம், கையில் இருந்த தங்க மோதிரத்தை எங்கே என கேட்டு அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 5, 2025

கள்ளக்குறிச்சியில் மழையால் 24 வீடுகள் இடிந்து விழுந்தன!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக கொங்கராயபாளையம், பெருவெங்கூரை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, குலதீபமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 24க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. அது தவிர, பசு மாடுகளும், 3 கன்றுகளும் உயிரிழந்துள்ளன. இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!