News April 5, 2025

சங்கரன்பந்தல்: சுகாதார நிலையத்தில் ஆண் சடலம்

image

மயிலாடுதுறை, சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியாக இருந்த கழிவறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 27, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

சீர்காழி நகராட்சி பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்பப் பெரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News November 27, 2025

மயிலாடுதுறை: பாம்பு கடித்து பள்ளி சிறுவன் பலி!

image

நீடூர் உக்கடை வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்துரு (12) நெய்தவாசலில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சந்துரு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான். அப்போது வீட்டின் அருகே கிடந்த கட்டுவிரியன் பாம்பு அவனை கடித்தது. இதையடுத்து குடும்பத்தினர் சந்துருவை சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு உயிரிழந்தார்.

News November 27, 2025

மயிலாடுதுறை: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும், இன்று (நவ.27) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!