News April 29, 2025
சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா மே 1ல் தொடக்கம்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா மே 1-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை ஏப். 30 யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கோவில் யானை கோமதியுடன் சென்று பிடி மண் எடுத்து விட்டு கோவிலுக்கு திரும்புவர். 9ம் திருநாளான மே 9 இல் தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படித்தார்கள் செய்து வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
தென்காசியில் குடைவரை கோவிலா.? எங்கு தெரியுமா?

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள திருமலாபுரத்தில் மலையை குடைந்து பசுபதிசுவரர் குடைவரை கோவில் உள்ளது .இந்த கோவில் 1200 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.இந்த கோவிலில் லிங்க வடிவத்தில் சிவன் காட்சியளிக்கிறார்.பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது .இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 29, 2025
நான்கு சக்கர வாகன வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் புதிய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை நேரில் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
News April 29, 2025
தென்காசி மக்கள்அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.