News April 13, 2025
சங்கடங்கள் நீக்கும் சாரம் முருகன் கோயில்

புதுவையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று சாரம் முருகன் கோயில். தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனை, மற்ற நாட்களில் வழிபடுவதை விட தமிழ் புத்தாண்டில் வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 26, 2025
புதுவை: லோன் பெற்று தருவதாக பணம் மோசடி – இளைஞர்கள் கைது

புதுவை, கொடாத்துாரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி அவர் தன்னுடைய வங்கி விவரங்களை வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். பின், மர்மநபர் ரூ.54 ஆயிரம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் தான் லோன் பெறமுடியும் என கூறவே அவர் பணத்தை அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகாரின்படி சென்னையைச் சேர்ந்த வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News November 26, 2025
புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
புதுவை: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

கோட்டிச்சேரியை சேர்ந்தவர் ராணி(68). இவரது கணவர் நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவர்களது 4 மகன்களும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனியே வசித்து வரும் ராணி, தனக்கு வாழப் பிடிக்கவில்லையென கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


