News March 26, 2025
கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
BREAKING: கோவை குற்றாலம் நாளை முதல் திறப்பு

கோவை குற்றாலம் வெள்ளப்பெருக்கால் மூடப்பட்டிருந்த நிலையில், மழைப்பொழிவு குறைந்ததுடன் நீர்வரத்தும் சீராகி இருப்பதால், நாளை (நவ.7) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 22 அன்று தொடர் மழையால் மூடப்பட்ட இத்தலம், 15 நாட்களுக்குப் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நாளை அனுமதிக்கப்படுகிறது.
News November 6, 2025
மேட்டுப்பாளையத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13-வயது மாணவிக்கு ஸ்டேஷனரி கடை உரிமையாளர் விஜயகுமார் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விஜயகுமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News November 6, 2025
கோவை: வாக்காளர்களே! முக்கிய எண்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த எண்ணை அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை (வ)- 0422-2551700, கோவை(தெ)- 0422-2302323, கவுண்டம்பாளையம்- 0422-2247831, கிணத்துக்கடவு- 0422-2301114, மேட்டுப்பாளையம்- 0422-2300569, பொள்ளாச்சி- 042-592-24855, சிங்காநல்லூர்- 0422- 2390261, சூலூர்- 0422- 300965, தொண்டாமுத்தூர்- 0422- 2300424, வால்பாறை- 9789555450


