News March 26, 2025

கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

BREAKING: கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை மாநகரின் மையத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இதன் அருகிலேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பிரதான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு 11-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலமாக வந்துள்ளது. இதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன், போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 4, 2025

கோவை: ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவிய பிரியா(25). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிய பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் காதலித்த இளைஞரை திருமணம் செய்ய இருந்த நிலையில், தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

கோவையில் இலவச Data Analytics பயிற்சி

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics-Google பயிற்சி வழங்கப்படுகிறது. 37 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் Data Analytics -இல் உள்ள Advanced Excel, Advanced SQL, Statistics,Tableau, Power BI ஆகிய அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!