News March 26, 2025

கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

கோவையில் காலியான அலுவலகங்கள்!

image

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் அதிக பணி சுமை காரணமாக போராட்டம் நடத்தப்படுவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இன்று காலியாகக் காட்சி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2025

கோவையில் காலியான அலுவலகங்கள்!

image

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் அதிக பணி சுமை காரணமாக போராட்டம் நடத்தப்படுவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இன்று காலியாகக் காட்சி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2025

கோவையில் வசமாக சிக்கிய நேபாள சிறுவன்!

image

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள நெகமம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பிரகாஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.25000 திருடு போனது தெரிய வந்தது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது நேபாள சிறுவனை கைது செய்தனர்.

error: Content is protected !!