News April 8, 2025
கோவை: வீட்டில் இருவர் சடலமாக மீட்பு!

கேரளாவை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர், கோவை, துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இன்று நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேக்கிரி ஊழியர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 4, 2025
கோவை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க !
News December 4, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, நீலிகோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் ஒரு பகுதி, ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, ஹவுசிங் யூனிட், மசக்காளிபாளையம், மருத்துவக்கல்லூரி ரோடு, உப்பிலிபாளையம், ஜிவி ரெசிடென்சி, சர்க்கரை செட்டியார் நகர், காமராஜர் ரோடு, பாரதி நகர், ராமானுஜ நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 4, 2025
BREAKING கோவை மக்களே உஷார்: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் (டிச.04), கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.


