News April 8, 2025
கோவை: வீட்டில் இருவர் சடலமாக மீட்பு!

கேரளாவை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர், கோவை, துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இன்று நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேக்கிரி ஊழியர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 1, 2025
ரஞ்சி கோப்பையில் அசத்திய மாணவருக்கு பாராட்டு!

ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் கோவை தனியார் கல்லூரி மாணவர் ஜி.அஜிதேஷ், அண்மையில் உத்தரபிரதேச அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 86 ரன்கள் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து இன்று (1.12.2025) கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் அவரை பொன்னாடை போர்த்தி பாராட்டி, வாழ்த்தினார்.
News December 1, 2025
கோவையில் நடிகை சமந்தா திருமணம்!

நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற பின், பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். இந்த நிகழ்வு குடும்ப நண்பர்களை மட்டுமே அழைத்து மிக தனிப்பட்ட முறையில் நடைபெற்றுள்ளது. சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப்சீரிஸில் ராஜ் நிடிமொரு உடன் இணைந்து பணியாற்றிய போது அவர்களது காதல் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
கோவை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


