News December 5, 2024

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

image

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள், நாளை நடைபெறவுள்ளது. இதனால் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி ரயில் மற்றும் மைசூா் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், நாளை காட்பாடி வரை மட்டுமே செல்லும். இதேபோல் கோவை நோக்கி வரும், இன்டா்சிட்டி, லால்பக் விரைவு ரயில்களும், காட்பாடியில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News November 27, 2025

தொண்டாமுத்தூர்: RIP ‘ரோலக்ஸ்’

image

தொண்டாமுத்தூர் பகுதியில் அக்.17-ம் தேதி யானை பிடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் பராமரிக்கப்பட்ட நிலையில் நவ.12-ம் தேதி மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. “ரோலக்ஸ்” காட்டு யானையை தினமும் ரேடியோ சிக்னல் வைத்து, நேரில் பார்த்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அங்கிருந்த ஓடையில் தண்ணீர் குடிக்க சென்ற போது வழுக்கி விழுந்தது. இதில் யானை இறந்து இருப்பது தெரியவந்தது.

News November 26, 2025

கோவை இரவு ரோந்து காவலர் விபரம்!

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (நவ.26) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News November 26, 2025

கோவையில் OPS -க்கு ஆயுர்வேத சிகிச்சை

image

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்தார். அப்போது, பேசிய ஓபிஎஸ் பேச வேண்டியதை எல்லாம் நேற்றே பேசிவிட்டேன். கோவையில் 6 நாள் தங்கி சிகிச்சைப்பெற உள்ளேன் என்றார். பின், அவர் கணபதிக்கு சென்று அங்குள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவர் அங்கு 6 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார்.

error: Content is protected !!