News December 5, 2024
கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள், நாளை நடைபெறவுள்ளது. இதனால் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி ரயில் மற்றும் மைசூா் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், நாளை காட்பாடி வரை மட்டுமே செல்லும். இதேபோல் கோவை நோக்கி வரும், இன்டா்சிட்டி, லால்பக் விரைவு ரயில்களும், காட்பாடியில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News October 30, 2025
பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி (அக்டோபர் 30 முதல் நவம்பர் 28 வரை) நடைபெறும். 12ஆம் வகுப்பு தகுதி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் தொழில்முனைவு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு swc@tnau.ac.in, 9789982772-ல் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
News October 29, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (29.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
கோவையிலிருந்து புறப்பட்டார் துணை குடியரசு தலைவர்!

துணைக் குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் திருப்பூரில் இன்று நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரை செல்வதற்காக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்து தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். துணை குடியரசு தலைவர் காரிலேயே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வருகை புரிந்து மதுரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


