News December 5, 2024

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

image

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள், நாளை நடைபெறவுள்ளது. இதனால் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி ரயில் மற்றும் மைசூா் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், நாளை காட்பாடி வரை மட்டுமே செல்லும். இதேபோல் கோவை நோக்கி வரும், இன்டா்சிட்டி, லால்பக் விரைவு ரயில்களும், காட்பாடியில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News November 24, 2025

மேட்டுப்பாளையம் அருகே விபத்து

image

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் மைதானம் பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் நீலகிரியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, அங்குள்ள பைக் மீது மோதியது. இதனால் இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சுற்றுப்புற மக்கள் உடனடியாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 24, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (23.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

கோவை வரும் முதல்வர் ஸ்டாலின்

image

நவ.25, 26-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். கோவையில் 45 ஏக்கரில் அமைந்த செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்து, தொழிலதிபர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் உடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஈரோட்டில் மாவீரன் பொல்லான் மணிமண்டபம் திறப்பு, தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை மற்றும் ரூ.605 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!