News April 18, 2024
கோவை: போலி ஆவணம் தயாரித்து ரூ.300 கோடி மோசடி

கோவையை சேர்ந்தவர் சிவராஜ். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர் சிவராஜ்-க்கு சொந்தமான 100 கோடி ரூபாய் ரொக்கத்தையும், சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களையும் போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இன்று(ஏப்.17) ஷீலா, அவரது மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
9-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி

தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவி கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. விசாரணையில், மாணவிக்கு வயது 16 என தெரியவந்ததை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
News April 20, 2025
கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.