News December 6, 2024
கோவை: நாயை விட்டு கடிக்க வைத்த பெண் கைது!

கோவை வெள்ளலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ரூ. 2 லட்சம் முன் பணம் செலுத்தி கார் வாங்கியுள்ளார். மீதமுள்ள பணத்திற்கு கடன் வாங்கியுள்ளார். கடன் தவணையை முறையாக செலுத்தாததால், கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள், நேற்று மணிகண்டன் வீட்டிற்கு வந்தனர். அப்போது மணிகண்டனின் மனைவி பிரியா, தன் வீட்டு நாயை ஏவி விடவே, அது ஒரு ஊழியரை கடித்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் பிரியாவை கைது செய்தனர்.
Similar News
News September 19, 2025
கோவையில் இன்று கரண்ட் கட்!!

கோவையில் இன்று (செப்.19) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆவாரம்பாளையம், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், நாசிமநாயக்கன்பாளையம், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், தொப்பம்பட்டி, மூப்பேரிபாளையம், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
News September 18, 2025
கோவை: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

கோவை மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு கோவையிலுள்ள அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 18, 2025
கோவை: தற்போது வரை 57 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 251 விபத்துகளில், 62 இளைஞர்கள் பலியாகினர். இந்த நிலையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 207 விபத்துக்கள் நடந்து, அதில் 57 இளைஞர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிய 11 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.