News October 24, 2024
கோவை-சீரடி இடையே வரும் 27ல் நேரடி விமான சேவை

மும்பை அருகே சீரடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. மேலும் உலகின் இரண்டாவது பணக்கார கோவிலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து முதல்முறையாக வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் கோவை-சீரடி இடையே நேரடி விமான சேவையை துவங்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
கோவையில் பாலியல் தொழில்: அதிரடி கைது!

கோவை, இடையபாளையம் பழனியம்மாள் லே-அவுட் பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை, கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில், தடாகம் சாந்தாமணி கேஜி புதூர் பிரிவு பத்மாவதி (27,) மருதமலை அண்ணாநகர் எலிசபெத் ராணி (30), சிங்காநல்லூர் சாந்தி (40) என தெரியவந்தது. கைது செய்த பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News December 14, 2025
கோவை: மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்!

கோவை இருகூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையோர புளிய மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
கோவை: சொந்த வீடு வேணுமா? இங்க போங்க!

பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்


