News October 24, 2024
கோவை-சீரடி இடையே வரும் 27ல் நேரடி விமான சேவை

மும்பை அருகே சீரடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. மேலும் உலகின் இரண்டாவது பணக்கார கோவிலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து முதல்முறையாக வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் கோவை-சீரடி இடையே நேரடி விமான சேவையை துவங்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
தொண்டாமுத்தூர்: திமுக நிர்வாகிகள் 9 பேர் விடுதலை!

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றி கருணாநிதியின் புகைப்படம் வைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட கூடுதல் 4-ஆம் நீதிமன்றம், திமுக நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.


