News October 24, 2024
கோவை-சீரடி இடையே வரும் 27ல் நேரடி விமான சேவை

மும்பை அருகே சீரடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. மேலும் உலகின் இரண்டாவது பணக்கார கோவிலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து முதல்முறையாக வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் கோவை-சீரடி இடையே நேரடி விமான சேவையை துவங்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
கோவை: 10th போதும்… ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 24 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 10th முதல் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 2026 ஜன.12ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 8, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.09) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மாதம்பட்டி, ஆலாந்துறை, கரடிமடை, செம்மேடு, பேரூர் செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், தாளியூர், கெம்பனூர், சித்திரை சாவடி, பூச்சியூர், தேவராயபுரம், போளுவாம்பட்டி, நரசிபுரம், தாயனூர், மருதூர், காரமடை, தேக்கம்பட்டி, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 8, 2025
கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.


